தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!”
“நீதியரசருக்கு இது ஒத்துவருமா?”
“வெளியேறு, வெளிமேறு… தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை விட்டு வெளியேறு!”
“தமிழக அரசே! நீதி செய்… நீதி செய்!”
என முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர்.
இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் சில நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு காரணங்களால் அங்கு பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டத்தில் டி.எஸ்.எப் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் உலக மீனவர் தின படகு போட்டி & நலத்திட்ட உதவி விழா சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026