தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திரா காந்தி சிலை மற்றும் ஆஷ் மெமோரியல் சந்திப்புகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன.
பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோபுரங்களின் மின்சார இணைப்பு, விளக்குகளின் ஒளிர்வு, பொது மக்களுக்கு ஏற்படும் வசதி ஆகிய அனைத்தையும் மேயர் ஆராய்ந்து, அதிகாரிகளிடம் தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்பணிகள் நிறைவு பெற்றதன் மூலம் தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகள் இரவு நேரங்களில் பிரகாசமடைந்து, போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி சந்திப்புகள் பளபளக்கும் புதிய ஒளியில் — நகரின் அழகை கூட்டும் உயர் மின் விளக்கு கோபுரங்கள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வேல் வேல் முருகா! – தூத்துக்குடியில் கந்த சஷ்டி முன்னிட்டு 108 பால்குடம் பவனி உற்சாகம்”
அடுத்த
மனிதநேயத்தின் முகமாக — செல்சினி காலணியில் இலவச மருத்துவ முகாம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026