தூத்துக்குடி தன்பாடு பகுதியில் உள்ள உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் புதிய அலுவலக கட்டிடம் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

இக்கட்டிட பணிகளை தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகள் குறித்து தகவல் பெற்ற அவர்,
“இந்த புதிய கட்டிடம் விரைவில் முடிவடைந்து, சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இது தொழிலாளர்களின் நலனில் ஒரு புதிய முன்னேற்றம் ஆகும்,” என தெரிவித்தார்.

இவ்வாய்வில் பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், கழக நிர்வாகிகள் ஏசுவடியான் மற்றும் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.