தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்ற பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி செய்து வருகிறது .

அதன் ஒரு பகுதியாக பிரதான சந்திப்புகளில் உயரம் குறைவான மின்விளக்குகள் அமைத்துள்ளோம். அதன்படி எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகிலுள்ள பிரதான சந்திப்பில் இருந்த விளக்கானது சேதமடைந்துள்ளதை தொடர்ந்து அதனை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் சரிசெய்யப்படும் என்பதை தெரிவித்தார்.

ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சரவணக்குமார், அந்தோணி மார்ஷலின், முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.