தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையன்ட்நகர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இன்று சில மணி நேரங்களிலேயே போலீசாரால் தீர்க்கப்பட்டது.
கோவில் நிர்வாகியான இசக்கிபாண்டி (46) நேற்று இரவு வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இன்று காலை திறந்து பார்க்கும்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த 10,000 ரூபாய் பணம் திருடப்பட்டிருப்பது கவனத்திற்குவந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (19) என்பவரே உண்டியலை உடைத்து பணத்தை திருடியமை கண்டறியப்பட்டது. பின்னர் போலீசார் அவரை கைது செய்து, திருடப்பட்ட ரூபாய் 10,000 பணத்தையும் மீட்டனர்.
கோவில் உண்டியல் உடைப்பு வழக்கை குறுகிய நேரத்தில் நளினமாகத் தீர்த்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.
தூத்துக்குடி
கோவில் உண்டியல் உடைப்பு : இரவில் நடந்த திருட்டு, பகலே போலீஸின் கையில் சிக்கிய இளைஞர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி காவல்துறைக்கு புதிய பலம் – 13 ஊர்க்காவல் வீரர்கள் பணி நியமன ஆணை பெற்றனர்!”
அடுத்த
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்ட நாடார் சமுதாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026