தூத்துக்குடி தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (17.09.2025) புதன்கிழமை காலை 11:30 மணியளவில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பெரியாரிய கூட்டமைப்பு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில், மாவட்ட துணை செயலாளர் ஆ. இந்திரன், மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை போன்ற பெரியார் கொள்கைகளை நிலைநாட்ட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்று உறுதிமொழி எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.