தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள லண்டன் வட்டமேசை நாயகர், பழந்தமிழர் திவான் பகதூர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் உருவச் சிலைக்கு 180 ஆவது நினைவு நாளையொட்டி (18.09.2025) மாலை 4 மணிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர், K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர், இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் ஆணையின்படி, கட்சி முதன்மை செயலாளர் D. ருசேந்திரகுமார் மற்றும் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. இந்திரன், மு. அந்தோணிசாமி முன்னிலை வகிக்க, மகளிர் அணி செயலாளர் S. சிறு லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு மு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி சமூக ஒற்றுமைக்காக பணியாற்றுவோம் என உறுதியெடுத்தனர்.
மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி வாசித்து, கொள்கை முழக்கத்துடன் சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி
இரட்டைமலை சீனிவாசனாரின் 180ஆவது நினைவு நாளில் புரட்சி பாரதம் கட்சி உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை காலம் வரும் முன் VMS நகரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!
அடுத்த
முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – தூய்மையான, பசுமையான மாநகரம் உருவாக்க உறுதி : மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026