தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு, தெற்கு VMS நகர் மேற்கு பகுதி தெருக்களில் பல ஆண்டுகளாக மணல் சாலைகளில் மழை பெய்யும் போது மழைநீர் கழிவுநீருடன் கலந்து நீண்ட நாட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் மர்ம வியாதிகள் பரவுவதோடு, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, வரும் மழை காலத்திற்கு முன்பாக சாலைகளில் உள்ள பள்ளங்களை மணலால் நிரப்பி, தார் சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாநகராட்சியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.