தூத்துக்குடி ராஜகோபால் நகர் 1வது தெருவில் வசிக்கும் சுந்தர் (தகப்பனார் முருகன்) தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கடந்த (24.12.2024) அன்று பெருமுடையான் மற்றும் அவரது சகோதரர் இசக்கி ஆகியோர் சுந்தரின் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி பொதுப் பாதையில் செல்ல முடியாத வகையில் தடையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதை பற்றி சுந்தர் கேள்வி கேட்டதற்கு, அந்த இருவரும் சண்டைக்கு வந்து சுந்தரை கம்பால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் சமாதானமாக பேசி வழக்கை முடித்து வைத்ததாக தெரிகிறது.

ஆனால் மீண்டும் (25.04.2025) அன்று பெருமுடையான் மற்றும் இசக்கி ஆகியோர் பொதுப் பாதையில் நீர் தேங்கி சிரமம் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என சுந்தர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று (12.10.2025) மூவருக்கும் இடையே மீண்டும் கடும் தகராறு ஏற்பட்டது. இதில் சுந்தர் மற்றும் அவரது தாய், தந்தை, மனைவி, மகன்கள் ஆகியோர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே சுந்தர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

“பெருமுடையான் மற்றும் இசக்கி எனை கடுமையாக தாக்கினார்கள். நான் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சுந்தர் செய்தியாளர் சந்திப்பில் வேதனை தெரிவித்தார்.

சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையம் மேலதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.