தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களின் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் , வார்டுகளில் உள்ள குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு, கழிவு நீர் வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் தொடர்பான குறைகளை மனுவாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, ஒவ்வொரு மனுவும் உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மக்கள் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் வகையில் துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துறை அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இனிகோ நகர் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கீதா ஜீவன்!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் மற்றும் கந்தசாமிபுரம் பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026