தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத், மற்றும் வல்லம் பஷீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (பொறுப்பு) மனு அளிக்கப்பட்டது.

மதிமுக சார்பில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தையும், மக்கள் தலைவர் வைகோ MABL.MP., அவர்களையும் முதன்மை செயலாளர் துரை வைகோ MP., அவர்களையும், தரக்குறைவாகவும் அவர்களது பெயர்களை களங்கப்படுத்தியும் ஒருமையிலும் பொய்யான தகவல்களை பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் மூலம் பேட்டிகள் கொடுத்து வருகின்ற நாஞ்சில் சம்பத், மற்றும் வல்லம் பசீர் போன்றவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் சமூக வலைதளங்களில் உள்ள பொய்யான தகவல்களை நீக்க வேண்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (பொறுப்பு)

மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு விநாயகா ரமேஷ் ஆலோசனையின்படி மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பேச்சிராஜ் தலைமையில் மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், மாநகர துணைச் செயலாளர் முருகேசன், அனல் மின் திட்ட தலைவர் காசிராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மகாராஜன் உட்பட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் .