நாடார் மக்கள் கூட்டமைப்பு ஏ.சி. துரை இன்று காலை திருச்சி சிவா எம்பி மற்றும் முள்ளக்காடு பகுதியை சார்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில் தெரிவித்ததாவது கடந்த (16.7.2025) அன்று நமது தேசியத் தலைவர் கல்விக் கடவுள் ஐயா கு. காமராஜர் எளிமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா எம்பி என்பவர் பேசியுள்ளார்.

மேலும் இதனைத் தொடர்ந்து பல்வேறு காணொளி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் இந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு நகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார் நாடார் இன மக்கள் ஜாதி வெறி பிடித்த நாய்கள் என்றும் இந்த சம்பவத்தைப் பற்றி பேசுபவர்கள் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் 3 நிமிட காணொளி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் நாடார் மக்களிடையே பெருந்தலைவர்க்கு காமராஜர் அவர்களின் புகழை கெடுக்கும்படியும் மிகுந்த பதிவு உள்ளாக்கி வருகிறது. ஆகையால் பெரும் மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மனுவின் போது சமத்துவ மக்கள் கழகம் மாலை சூடி அற்புதராஜ், பெருந்தலைவர் மக்கள் கழகம் எஸ். மாரியப்பன், தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர், சாஸ்தா, வீரமுருகன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், மற்றும் கார்த்திசன், காமராஜர் நற்பணி இயக்கம் கிருஷ்ணராஜபுரம் அசோக், பாலா, பனைக்காட்டு படை கட்சி ஹரிராம், உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.