தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மழைக்காலத்தில் மாநகரப் பகுதிகளில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, புறநகர் பகுதிகளில் இருந்து மாநகர எல்லைக்குள் மழைநீர் செல்லும் வழித்தடமான இந்திய உணவுக் கழகத்தின் முன்புற ஓடையில் நடைபெற்று வரும் அகலப்படுத்தும் பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் மற்றும் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் ஆகியோர் உடன் இணைந்திருந்தனர்.