தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி மக்கள் போல்பேட்டை முகாம் டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினா் வடக்கு மாவட்ட திமுக உள்பட 3 அலுவலகங்களிலும் அமைச்சா் கீதாஜீவனிடம் நோில் கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு அரசுத்துறை சாா்ந்த மனுவை சம்பந்தப்பட்ட அலுவா்களுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களின் மனுக்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சம்பந்தபட்டவா்களுக்கு தொிவிப்பதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது.
    
இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 6 வது வாா்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சந்தனராஜ், என்பவா் செவித்திறன் குறைபாடு இருப்பதால் தனக்கு செவித்திறன் கருவி வழங்க வேண்டும் கோாிக்கை மனு அளித்திருந்தாா். இம்மனு அமைச்சாின் கவனத்திற்கு சென்றதின் அடிப்படையில் நோில் விவரங்களை கேட்டறிந்த போது சந்தனராஜ் கடந்த காலத்தில் திமுக மாவட்ட செயலாளராக என். பொியசாமி இருந்த காலத்தில் இது போன்ற கருவி எனக்கு வாங்கி கொடுத்தாா்கள்.

அது வருடங்கள் பல கடந்து விட்டதால் செயல் இழந்து விட்டது. என்று கூறியதின் பெயாில் அதே போல் செவித்திறன் கருவியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் சந்தனராஜ்க்கு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா். நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா் ஜெயசீலி, பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் உடனிருந்தனா்.