தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி, முள்ளக்காடு பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பாக விவசாய நிலங்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் வகையில் உப்பாத்து ஓடை உள்ளிட்ட வடிகால் பகுதிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் தெரிவித்த பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், தற்போது கழிவுநீர் ஓடைகள் ஆழம் குறைந்திருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக கூறினர். மேலும், கழிவுநீர் ஓடைகளில் உள்ள கற்களை அகற்றி, ஆழமாக தோண்டினால்தான் தண்ணீர் சீராக கடலுக்குச் செல்லும் என்றும் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக இரண்டு ஜேசிபிகளை பயன்படுத்தி வடிகால் தோண்டுவதற்கும் கழிவுகளை அகற்றுவதற்கும் அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். மேலும், மழை தொடங்கும் முன்னரே பணிகளை துவங்கி விரைவாக முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பொறியாளர் தமிழ்செல்வன், அத்திமரப்பட்டி விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, துணைத்தலைவர் திருமால், செயலாளர் ரகுபதி என்ற சின்னராசு, பொருளாளர் சின்னக்குட்டி தானியேல், வேளாண்மை இயக்குநர் பொியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், இளநிலை பொறியாளர் செல்வக்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அத்திமரப்பட்டி – முள்ளக்காடு பகுதியில் மழைக்கு முன் வடிகால் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உத்தரவு : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பா.ஜ.க முன்னணி தலைவர் H.ராஜாவை சந்தித்தார் எழுத்தாளர் பெ.செந்தில்குமார்!!
அடுத்த
கட்டுமானப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் குறைக்க வேண்டும் – நாம் இந்தியா் கட்சி மாநில தலைவர் என்.பி. ராஜா வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026