இன்று (19.09.2025) மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியையொட்டி, மதிமுக தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணப்பெருமாள், கணேஷ் நகரில் உள்ள அமைச்சரின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அத்துடன், அமைச்சரின் மக்கள் நல சேவைகள் தொடர்ந்து சிறப்புடன் நடைபெற வாழ்த்தியும், பொதுமக்கள் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் மேலும் பலப்பட வேண்டும் என்றும் தனது நல்வாழ்த்துகளைச் சேர்த்தார்.