தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள வெங்கடேஸ்வரா டீ ஸ்டால் எதிரே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திமுக தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர், மாநகராட்சி கணக்குக் குழு தலைவர் மற்றும் 3வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி செய்து இருந்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஜெகன் பெரியசாமி தனது உரையில், “நகரத்தின் தூய்மைக்கும் நலத்திற்கும் தினமும் கடினமாக உழைக்கும் தூய்மை பணியாளர்களே மாநகரத்தின் உண்மையான பெருமை. அவர்களின் சேவையை மதிப்பதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே நகரத்தின் முன்னேற்றம்,” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ராஜசேகர், தொமுசு கே. முத்துராஜ், இ.பி. செல்வராஜ், மக்புல் பாட்ஷா, நயினார், சுடலை, டி. பாலு, ஜவகர், பால்ராஜ் ராஜாமணி, அண்ணாதுரை, சங்கர நயினார், சங்கர சுப்பிரமணியன், கே.டி.சி. சண்முகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தூய்மை பணியாளர்கள் புத்தாடை மற்றும் இனிப்புகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். தீபாவளியை முன்னிட்டு அன்பும் மனிதநேயமும் நிறைந்த இந்நிகழ்ச்சி அனைவரிடமும் பாராட்டை பெற்றது.