தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட  தந்தை பெரியார் நகர், செயின்ட் மேரிஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய தார்சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் ஆரம்பமாக போகும் இடங்களை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வட்டக் கழகச் செயலாளர் குமார், மண்டல தலைவரும், பகுதி கழக செயலாளருமான நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, அந்தோணி மார்ஷலின், வட்ட கழக பிரதிநிதி கருப்புசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.