தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசித்தர் பீடத்தில், ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு அக்டோபர் 21, செவ்வாய்க்கிழமை சிறப்பு மஹா யாக வழிபாடுகள் மிகுந்த பக்தி, ஆன்மீக உணர்வுடன் நடைபெற்றது.
“சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்ற இவ்வழிபாட்டில், உலகில் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும் என்பதோடு, விவசாயம் மற்றும் அனைத்து தொழில்களும் செழித்திட வேண்டும் என்றும், பக்தர்களின் வாழ்வில் செல்வ வளம் பெருகிட வேண்டும் என்றும் ஸ்ரீ மஹா பிரத்தியங்கிரா தேவியிடம் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
மஹா பிரத்தியங்கிராதேவி மற்றும் மஹா கால பைரவருக்கு பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64 வகையான அபிஷேகங்கள் மிகுந்த ஆராதனையுடன் நடைபெற்றது. தொடர்ந்து ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.
மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளும் “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்குழுவினரால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
தூத்துக்குடி
ஸ்ரீசித்தர் பீடத்தில் மஹா யாக வழிபாடு: அன்பும் அமைதியும் நிலவ பிரார்த்தனை – “சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் கோலாகலம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் 24 மணி நேர மழைநீர் கண்காணிப்பு – மேயர் ஜெகன் பொியசாமி நேரடியாக ஆய்வு!!
அடுத்த
மழைநீர் பிரச்சனைக்கு மின்னல் வேக தீர்வு — அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி நடவடிக்கை!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026