பெற்றோர்கள் இல்லாமல் ஏழ்மை நிலையில் தவித்து வந்த மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரைச் சார்ந்த, 4 ம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் மற்றும் 3 ம் வகுப்பு படிக்கும் நேகா ஸ்ரீ ஆகிய இரண்டு குழந்தைகளின், உறவினர்கள் கோரிக்கையை ஏற்று,

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் இரண்டு குழந்தைகளை நேரில் சந்தித்து, வரும் காலங்களில் குழந்தைகளின் முழு கல்விச் சம்பந்தமான செலவுகள் முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்

பின்னர் இரண்டு குழந்தைகளுக்கும் பள்ளிச் சீருடைகள், நோட்டு புத்தகங்கள் அடங்கிய கல்வி உபகரணங்கள் மற்றும் குழந்தைகளின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் உடன் இருந்தனர்.