தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் இன்று காலை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டு தீர்வுகாணும் நிகழ்வாக அமைந்தது. மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் மன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
முகாமில் குடிநீர் பிரச்சினை, கழிவுநீர் தொடர்பான சிக்கல்கள், வீட்டு தீர்வை வசதி கோரிக்கை, பிறப்பு–இறப்பு சான்றிதழ் விண்ணப்பம், ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள் மனுக்கள் அளித்தனர். அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அவற்றை விரைவாக பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்த முகாம் மூலம் மக்கள் தங்களது பிரச்சினைகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், தகுந்த தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் கௌரவிப்பு!!
அடுத்த
இரட்டைமலை சீனிவாசனார் 180வது நினைவு நாளில் வீரவணக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026