தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள டி.சவேரியார்புரம் புனித சேவியஸ் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் குழந்தை ராஜன் தலைமை தாங்கி முன்னிலை வகிக்க, தலைமை ஆசிரியர் மாரி செல்வராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் லயன்ஸ் கிளப் தலைவருமான காசி விஸ்வநாதன் வழங்கினார். மேலும் ஆரோவாட்டர் பில்டர் வகைக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் வழங்கினார்.
விழாவில் பேசிய அவர், “கல்வி என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உயர்த்தும் முதலாவது அடித்தளம். நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல்வவற்றை மதித்து நடந்து முன்னேற வேண்டும்” என்று மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் நைஸ் பரமசிவம், லயன்ஸ் கிளப் செயலாளர் டேவிட், துணைத் தலைவர் ஜான் கென்னடி ராஜன், பொருளாளர் விக்னேஷ் ஜெயபால், இயக்குநர் விமல்ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள், மாணவ–மாணவிகள் என பலரும் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டி.சவேரியார்புரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புதிய உயர் மின் விளக்கு கோபுரம் செயல்பாட்டுக்கு—மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“தூத்துக்குடியில் நேரு நூற்றாண்டு நினைவு — ஐஎன்டியூசி தலைமையில் மரியாதை விழா”
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026