வரும் அக்டோபர் 20ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் வெடிகள் வெடிக்க வேண்டும் என சகா கலைக்குழு முனைவர் சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

தீபாவளி என்பது ஒளியும் ஆனந்தமும் நிறைந்த பண்டிகை என்றாலும், அதே சமயம் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய முக்கியமான நாளுமாகும். சிறுவர்கள் பெரியோரின் கண்காணிப்பில் மட்டுமே வெடிகள் வெடிக்க வேண்டும். மேலும், செயற்கை நாரால் செய்யப்பட்ட உடைகள் அணிவதை தவிர்த்து, பருத்தி துணி உடைகளை அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன், வெடிகள் வெடிக்கும் இடம் திறந்த வெளியில் இருக்க வேண்டும்; தீ பற்றக்கூடிய பொருட்களிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் என்றும், விபத்துகளை தவிர்க்க சுலபமான முதலுதவி பொருட்கள் வீட்டில் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இத்தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன், பாதுகாப்பாக கொண்டாடி, அன்பும் ஒற்றுமையும் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என முனைவர் சங்கர் தெரிவித்தார்.

மேலும், அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தும் அவர் தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.