தூத்துக்குடி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று காலை 10 மணிக்கு சமூக நீதி தாத்தா, சனாதன மூடநம்பிக்கையிலிருந்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்த போராளி தந்தை பெரியாருக்கு புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் வலியுறுத்தப்பட்டு, அதனை மறந்த சில “திராவிட மாடல்கள்”க்கு எடுத்துக்காட்டாக உண்மையான திராவிட மாடலை நிலைநாட்டுவோம் என்ற உறுதி எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமூக நீதி உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் பிஜே. பிரதீப் ஜேசுதாஸ் முன்னெடுத்து “நீல வணக்கம்” எனக் கொண்டாடினர்.