பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜீக்கு சிறந்த ஆசிரியர்கான விருது வழங்கப்பட்டது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேல்ஸ் பல்கலைக்கழக சிவாலயா அரங்கில் நடைபெற்றது.
அதில் மிகச் சிறந்த 6 ஆசிரியர்களில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, து.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியில் பணியாற்றிவரும் நல்லாசிரியர் நெல்சன் பொன்னராஜ் ஆவார். அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் மூலம் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது.
விழாவில் வேல்ஸ் நிறுவனர் டாக்டர் ஜி. கண்ணன், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையாசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு விருது வழங்கிக் கௌரவித்தார். விருது பெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
தூத்துக்குடி
பண்டாரம்பட்டியைச் சேர்ந்த ஆசிரியர் நெல்சன் பொன்னராஜுக்கு சிறந்த ஆசிரியர் விருது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒன்றாம் கேட் காந்தி சிலை அருகே சிறிய பூங்கா – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி தெப்பக்குளம் புது முகம் பெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026