தூத்துக்குடி எம்பவர் இந்தியா, சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா மற்றும் தூய மரியன்னை கல்லூரி இணைந்து, பெண்களுக்கு எதிரான இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தின.
நிகழ்ச்சியை மாவட்ட இணைய குற்றப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் துவக்கி வைத்தார். தூய மரியன்னை கல்லூரி முதல்வர் ஜெசி வாழ்த்துரை வழங்கினார்.
கருத்தரங்கில் எம்பவர் இந்தியா கௌரவ செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ. சங்கர் உரையாற்றியபோது,
“பாதுகாப்பான டிஜிட்டல் பயணத்திற்கு ஒவ்வொருவரின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியம். அறிமுகமில்லாதவர்களின் வேண்டுகோளை நம்பி ஏடிஎம் கார்டு அல்லது வங்கி கணக்கை பயன்படுத்தி உதவுவது பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
பெண்கள் மீது நடைபெறும் இணைய குற்றங்கள், வழக்குகள் மற்றும் நடைமுறைகள் குறித்து சைபர் கிரைம் சொசைட்டி ஆப் இந்தியா தலைவர் பாலு சுவாமிநாதன் எடுத்துரைத்தார். இணைய குற்றங்களின் தொழில் நுட்ப அம்சங்களை செயலாளர் விஜயகுமார் விளக்கினார்.
முன்னதாக பொருளாதாரத்துறை பேராசிரியை ரதி வரவேற்றார். மாணவி முத்து மதுமிதா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நுகர்வோர் மற்றும் மனித உரிமை மன்ற பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பெண்கள் பாதுகாப்பு – இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எஸ்.பி. மாரியப்பன் நாடார் தலைமையில் (பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம்) வெங்கடேஷ் பண்ணையார் 22வது நினைவு வீரவழிபாடு - தூத்துக்குடியிலிருந்து 25க்கும் மேற்பட்ட வாகனப் பேரணி மூலக்கரைக்கு புறப்பட தீர்மானம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் அக்காநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026