தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சண்முகபுரம் பகுதியில் உள்ள பனங்காட்டு தெருவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு கோரிக்கையை பொதுமக்கள் சமீபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களுக்கு மனுவாக அளித்திருந்தனர்.

இது குறித்து இன்று அமைச்சர் கீதா ஜீவன் நேரில் அந்தப் பகுதிக்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, கழிவு நீர் கால்வாயின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த சீரமைப்பு பணிகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். “எங்களது கோரிக்கையை உடனடியாக கவனித்து, திடீரென நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி,” என பொதுமக்கள் தெரிவித்தனர்.