தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மட்டக்கடைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினைகளை கவனமாக கேட்டறிந்த மேயர், அந்தப் பகுதியில் தேவையான இடங்களில் வடிகால் கல்வெட்டு அமைத்து தரப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். “வரும் நாட்களில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்” எனவும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நடவடிக்கை, மக்கள் கோரிக்கைகளுக்கு உடனடி பதில் அளிக்கும் வகையில் மாநகராட்சியின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி
மட்டக்கடையில் வடிகால் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செக்காரக்குடியில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் – ஆபத்தான இபி போஸ்ட் மாற்றி அமைத்த MLA சண்முகையாவிற்கு நன்றி!!
அடுத்த
“குடிமக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் தமிழக அரசு” – கிறிஸ்து அரசு நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026