தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மட்டக்கடைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்கு பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினைகளை கவனமாக கேட்டறிந்த மேயர், அந்தப் பகுதியில் தேவையான இடங்களில் வடிகால் கல்வெட்டு அமைத்து தரப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். “வரும் நாட்களில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்” எனவும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நடவடிக்கை, மக்கள் கோரிக்கைகளுக்கு உடனடி பதில் அளிக்கும் வகையில் மாநகராட்சியின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டினர்.