வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து மழைநீர் தேங்கியிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும்பாலான இடங்களில் மழைநீரை அகற்றியது. பல பகுதிகளில் நீர் தானாகவே கடலுக்கு சென்றது. ஆனால் மூன்றாம் மைல் பகுதியில் மழைநீர் செல்லாமல் தேங்கியிருந்தது.
இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள ஒரு பிரபல ஹோட்டல், இறைச்சி கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 30 அடி நீளத்திற்கு கழிவுநீர் கான் அடைப்பு ஏற்பட்டது.
நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிமெண்ட் பிளேட்டுகளை அகற்றினர். அதில் மனித மற்றும் இறைச்சி கழிவுகள் பாறை போல உறைந்து தேங்கி இருந்தது தெரியவந்தது. சுமார் ஒரு லாரி அளவுக்கு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் அந்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயலில் மீண்டும் ஈடுபட்டால், ஹோட்டல் நிரந்தரமாக மூடப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் ஆகியவை மனித கழிவு, இறைச்சி கழிவு போன்றவற்றை நேரடியாக கழிவுநீர் கால்வாய்களில் விடக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
தற்போது மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய மீறல்களை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டுகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறிய ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் – மழைநீர் தேக்கம் காரணமாக மீறல் வெளிச்சம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அதிமுக 54-வது ஆண்டு விழா – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு: “பசுமையான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான காலநிலை நடவடிக்கைகள்” குறித்து விழிப்புணர்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026