தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு உடனடி தீர்வுகள் வழங்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். முகாமில் மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ், பொன்னப்பன், ராமர், ஜான் சீனிவாசன், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகாமின் போது பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை விரைவாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.