ஸ்டெர்லைட் ஆலையால் தன்னுயிர் நீத்த மன்னுயிர் காத்த நம் முத்து நகரின் தியாகிகளின் 7 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு இன்று காலை தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தவெக  தோழர்கள், தோழிகள் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தியாகிகளின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வீரவணக்கம் செய்தனர்.

பின்னர் தவெக நிர்வாகிகள் அனைவரும் தியாகிகளுக்கு வீர முழக்கம் எழுப்பி வீரவணக்கம் செய்தனர்.