ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாமில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பார்வையிட்டனர்.
முகாமில் பொதுமக்களுக்காக பல்வேறு சிகிச்சைகள், உடல் பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
அத்துடன், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு அரசு காப்பீட்டு அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மக்கள் நலனை மையமாகக் கொண்டு தமிழக அரசு மேற்கொண்டு வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டது.
தூத்துக்குடி
புதுக்கோட்டையில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் – பொதுமக்கள் நலனில் உறுதுணையாக அரசு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முத்தையாபுரத்தில் மின் தட்டுப்பாடு சரி செய்ய நடவடிக்கை – புரட்சி பாரதம் கட்சி நன்றி தெரிவித்தது!!
அடுத்த
கோரம்பள்ளம் குளம் கரை நிலைமையை ஆய்வு செய்தார் எம்.சி.சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026