ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியத்தில், “என் வாக்குச்சாவடி… வெற்றி வாக்குச்சாவடி” என்ற முழக்கத்துடன் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் ஓணமாக்குளம் வாக்குச்சாவடி எண் 1 மற்றும் 2, வி.பி. தாழையூத்து வாக்குச்சாவடி எண் 3 ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பது குறித்து விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், திராவிட மாடல் அரசின் முக்கிய சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கி, மக்களுடன் நேரடி தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் எல். ரமேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராகுல், இளைஞரணி நிர்வாகிகள் மாரியப்பன், முத்துசெல்வன், கிளை செயலாளர்கள் அறிவழகன், மூர்த்தி உள்ளிட்டோர், பாக நிலை முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தளபதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் வெற்றி வாக்குச்சாவடியாக மாற்ற உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் மைய நோக்கமாக இருந்தது.