திருச்சிராப்பள்ளி, நவம்பர் 10:
முதியோரின் நலனையும், சமூக உறவுகளையும் மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் “அன்புச் சோலை” திட்டம் மாநில அளவில் துவங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள பானை பவுண்டேஷன் வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதியோருக்கான மனமகிழ் வள மையங்களாக இயங்கவுள்ள “அன்புச் சோலை” மையங்களில் யோகா, புத்தக வாசிப்பு, திறன் மேம்பாடு, மருத்துவ ஆலோசனை, பொழுதுபோக்கு போன்ற சேவைகள் வழங்கப்படும். மூத்த குடிமக்களின் மனநலம், உடல்நலம், சமூக ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 25 இடங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்திரசேகரன் நகரிலும் இன்று காணொளி காட்சி வழியாக திட்டம் துவங்கியது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க. இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அன்புச் சோலை மையத்தில் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.
முதியோரின் மனநலனையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட “அன்புச் சோலை” திட்டம், மக்கள் நலனை முன்னிருப்பில் வைத்து செயல்படும் தமிழ்நாடு அரசின் புதிய முன்னேற்ற முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
“அன்புச் சோலை” திட்டம் மாநிலளவில் துவக்கம் — முதியோரின் வாழ்வில் புதிய ஒளிக்கதிர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மில்லர்புரம் பகுதியில் உயர் மின் விளக்கு கோபுரப் பணிகள் விரைவில் நிறைவேறும் – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட ஒட்டப்பிடாரம் பகுதி தமிழர்களுக்கு அரசு உதவிக்கரம் – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026