புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் இணைந்து இன்று காலை 6 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

நாள் தோறும் நடைப்பயிற்சி பெற வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் தொடக்க நிலையிலேயே பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

இந்த நிகழ்வில் புற்றுநோய் துறை பேராசிரியர் டாக்டர் லலிதா ராமசுப்பிரமணியம், உதவி பேராசிரியர்கள் U. இன் சுவை, ஆக்னஸ் லலிதா, உதவி உறைவிட மருத்துவர் டாக்டர் Febin Cortex, உறைவிட மருத்துவர் டாக்டர் ஜே. சைலஸ் ஜெயமணி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு உரையாற்றினர்.

மார்பக புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறிவது உயிர் காக்கும் முக்கியமான படியாகும் என்பதை வலியுறுத்தி, பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்த வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.