18/09/2025 – லண்டன் வட்டமேசை நாயகன், பழந்தமிழர் திவான் பகதூர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 180வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு. சின்னதுரை அவர்கள் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

சமூக நீதி, சமத்துவம் மற்றும் தமிழர் எழுச்சிக்காக போராடிய பெருமைமிகு இரட்டைமலை சீனிவாசனாரின் நினைவு நாளில், அவரின் பண்புகள், போராட்டங்கள் மற்றும் தமிழர் முன்னேற்றம் குறித்த உறுதிப்பாடுகளை வலியுறுத்தும் வகையில் நிகழ்வு நடைபெற்றது.