அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் இன்று தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள அபிநயா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை பார்வையிட்டனர்.

அதைத்தொடர்ந்து முகாமில் பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கடாசலம், திமுக பொதுக் உறுப்பினர் கோட்டு ராஜா, உட்பட மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் கழக செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.