தூத்துக்குடி மாவட்டம், அய்யனடைப்பு ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட 220 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (22/11/2025) சிறப்பாக நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தைத் திறந்து வைத்து, புதிய வீடுகளுக்கான குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்.
பொதுமக்கள் நலனை முன்னிறுத்திய இந்த முக்கிய திட்டம், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய வாழ்விடத்தை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பயனாளர்கள், அரசின் மக்கள் நலப் பணிகள் குறித்து தங்களது திருப்தி மற்றும் நன்றிகளை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
அய்யனடைப்பு அடுக்கு மாடிக் குடியிருப்பு திறப்பு விழா — கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முனைவர் சகா. மா. சங்கர்: மழைக்கால சுகாதார விழிப்புணர்வு பதிவு வெளியீடு!!
அடுத்த
குப்பைகள் எரிப்பதால் தீவிர சுகாதார அபாயம் – தமிழன்டா கலைக்குழு விழிப்புணர்வு பரப்பும் கலைசுடர்மணி செ. ஜெகஜீவன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026