தூத்துக்குடி, நவம்பர் 10:
தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் தேர்தல் நேற்று (நவம்பர் 9) நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் நியமன தலைவராக சுயம்புலிங்கம் இருந்தார். இம்முறை நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைமைப் பொறுப்பிற்காக போட்டியிட்டார்.
மொத்தம் 83 வாக்குகளில் 81 வாக்குகள் பதிவான நிலையில், சுயம்புலிங்கம் 56 வாக்குகள் பெற்று, எதிரணி வேட்பாளர் விஜயை விட 31 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். விஜய் 25 வாக்குகள் பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் பார்த்தசாரதி, முரளி, மற்றும் கண்காணிப்பாளர் வழக்கறிஞர் கலைச்செல்வி முன்னிலையில் எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு, அமைதியான முறையில் நிறைவு பெற்றது. வெற்றி பெற்ற பின்னர் சுயம்புலிங்கம் தெரிவித்ததில், “கிரேன் உரிமையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டு, அவர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படுவேன்” என கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிரேன் உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் சுயம்புலிங்கம் வெற்றி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாலியில் கடத்தப்பட்ட ஒட்டப்பிடாரம் பகுதி தமிழர்களுக்கு அரசு உதவிக்கரம் – எம்.சி. சண்முகையா எம்எல்ஏ நடவடிக்கை!!
அடுத்த
மாலியில் கடத்தப்பட்ட ஐந்து தமிழர்களை மீட்க வெளியுறவுத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி கருணாநிதி எம்.பி வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026