ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சியினருடனான SIR கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கணக்கெடுப்பு பணிகள் தெளிவாகவும் சீர்பாடாகவும் நடைபெற வேண்டும் என கூறினார்.
SIR கணக்கெடுப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் BLA-2 அல்லது BLO மூலம் தெரிவிக்கலாம் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அலுவலர் கல்யாண்குமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் புவனேஷ்வரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / வட்டாட்சியர் சண்முகவேலு, ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி, எஸ்.ஆர். சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், ஆரைக்குளம் சமுத்திரவேல் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கணக்கெடுப்பு பணிகளை துல்லியமாக நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரத்தில் அனைத்து கட்சியினருடன் SIR கணக்கெடுப்பு ஆலோசனை – ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடி மக்கள் சொன்னால் — மாநகராட்சி செய்துவிடும்! குறைதீர்க்கும் முகாமில் மேயர் உறுதி”
அடுத்த
உலக மாற்றுத்திறனாளிகள் தினம்: திறமைக்கு வணக்கம், சேவைக்கு பாராட்டு - முதலமைச்சர் ஸ்டாலின் மாநில விருதுகள் வழங்கி கௌரவிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026