தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 2 மற்றும் 14 வார்டு மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அய்யாசாமி காலணி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.


இதில் 13 துறையின் கீழ் 43 வகையான பயன்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நடைபெற்றது. முகாமில் சண்முகையா எம்.எல்.ஏ பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தாா். பின்னர் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.
   

நிகழ்ச்சியில் மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், தாசில்தாா்கள் முரளிதரன், முருகேஸ்வரி, மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் முனீஸ், இளநிலை பொறியாளர் ராஜேஷ் கண்ணன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், கிராமநிர்வாக அலுவலா்கள் சுரேஷ்குமாா், மீனாட்சி பிரேமலதா, திருவரங்க செல்வி, ராஜலட்சுமி, உதவியாளர்கள் குமாரலிங்கம், சின்னத்தாய், ஹசினாசுஜிதாபானு, திமுக பகுதி செயலாளர் சிவகுமார், மாவட்ட பிரதிநிதிகள் பூவேஸ்நாதன், தர்மராஜ், மகளிரணி அமைப்பாளர் பௌசியா, வட்ட செயலாளர் கார்த்திக், தொமுச முத்துராஜ், பகுத்தறிவு கழக பேரவை முருகேசன், மற்றும் கப்பிகுளம் பாபு, பொன்ராஜ், முருகேசன்,  அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.