தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மச்சாது நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தின் வழியாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மச்சாது நகர் பகுதியில் நேரில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தில் மின் மோட்டார் இடையறாது இயங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்து, மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் ஓட்டம் வழிமுறையாக நீங்கும் வரை அந்தப் பகுதியில் எச்சரிக்கையாக பணியாற்றுமாறு பணித்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மச்சாது நகரில் மழைநீர் பணிகள் தீவிரம் – மேயர் ஜெகன் கண்காணிப்பு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் மழை நீர் வெளியேற்றம் தீவிரம்: மேயர் ஜெகன் பெரியசாமி நேரடி ஆய்வில் முன்னிலை!!
அடுத்த
கருணை அடிப்படையில் அரசு பணி – தூத்துக்குடியில் 7 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026