தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதி — முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் பகுதிகளில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் பாரம்பரிய உப்பளத் தொழிலை அழித்து, கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட கூடாது என வலியுறுத்தி, உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈ.பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
உப்பளத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் பொன்ராஜ், பேச்சிமுத்து, பூமயில், பரமசிவன், முனியசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், விவசாய சங்கம் சார்பில் ஜோதிமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அவருடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், தமிழக வெற்றி கழகத்தின் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சியின் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் மற்றும் அன்னலட்சுமி, ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர் கதிர்வேல், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள் இணைந்து பங்கேற்றனர்.
அரசு உடனடியாக உப்பளத் தொழிலை காக்கும் நடவடிக்கைகளை எடுத்து, கடலோர மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஒருமித்த கோரிக்கை வைக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி கடலோர உப்பளத் தொழிலை காப்பாற்ற கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ALL CAN TRUST அமைப்பின் 220வது ‘ALL CAN FEED THE NEEDY’ உணவளிப்பு நிகழ்வு தூத்துக்குடியில் சிறப்பாக நடைபெற்றது"
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ ஆய்வு – உப்பாற்று ஓடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026