திருநெல்வேலி பாளையங்கோட்டையில் காதல் விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர், தமிழ் செல்வி தம்பதியரின் மகன் மென் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசுகையில் அந்த இளைஞரை பெண்ணின் சகோதரர் சுர்ஜித் என்பவர் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர்களான பெண்ணின் பெற்றோர் மீதும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மட்டும் பாய்ந்துள்ளது. ஆனால், அவர்கள் கைது செய்யப்படவில்லை, அவர்களையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதோடு இவர்கள் யார் என்ற முகம் வெளி உலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ஆணவப் படுகொலைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இனி இதுபோன்ற துயர சம்பவம் நடைபெற கூடாது என்று மக்கள் நல உரிமை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து சிறப்பு சட்டம் இயற்றி அதன் படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணவப் படுகொலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க முன்வர வேண்டும். என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்துவதாக தெரிவித்து கவின் செல்வ கணேஷ் பெற்றோருக்கு தனது ஆறுதலை தெரிவித்தார்.
தூத்துக்குடி
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் செல்வ கணேஷ் இல்லத்திற்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சென்று ஆறுதல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆணவப் படுகொலைக்கு எதிராக தமிழக அரசு தனி சட்டம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் திராவிட மாடல் அரசை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்துவோம் என்று புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அறிவிப்பு!!
அடுத்த
மூதாட்டியிடம் வாட்ஸ் அப் காலில் தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026