16வது மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மாநில ஐஎன்டியுசி பொதுச் செயலாளரும், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினருமான பெருமாள்சாமி, தூத்துக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி பனிமய மாதா திருத்தளத்திற்கு தங்கத் தேர் வழங்கியவராக வரலாற்றில் சிறப்பு பெற்ற பாண்டியபதி தேர்மாறன், சமூக நல்லிணக்கம் மற்றும் பண்பாட்டு மரபுகளை பேணிய மாமன்னராக போற்றப்படுவதாக நிகழ்ச்சியில் பேசியவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலாளர் இக்னேஷியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், மகிளா காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவி இசக்கியம்மாள் சேகர், பிரைன் நாத் நெல்சன், சுரேஷ்குமார், முருகேசன், முத்துராஜ், வழக்கறிஞர் செல்வம், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் ஐஎன்டியுசி சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், பாலன், கிரிதரன் பிரபு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயசிங், தியாகு, விஜய், திவாகர், துரை, ரகு, அபிஷேக், திருமணி, சுபாஷ், சுந்தர், முருகதாஸ், முருகேசன், முத்து, சுரேஷ், மணி, குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மாமன்னருக்கு மரியாதை செலுத்தினர்.