தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையம் வளாக அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணிமேகலை விருது மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகளை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மைய வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஆகியோர் கலந்து கொண்டு துணை முதல்வர் தொடங்கி வைத்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள் மற்றும் வங்கி கடன் இணைப்புகளை வழங்கி சிறப்பு செய்தார்கள்.
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மல்லிகா, மற்றும் அரசு அதிகாரிகள், மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் கவுன்சிலர்கள், திமுக கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு சுய உதவிக் குழுவிற்கு விருது மற்றும் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா - காணொளி காட்சி மூலம் துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
குளத்துள்வாய்ப்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் எட்டையபுரம் காவல் நிலையம் எஸ்.ஐ. மாதவராஜன் ஆகியோர் தொடர்ந்து மிரட்டல் விடுவதாக கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் மக்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் ரூ 120.53 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி பகுதியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் பகுதி சார்ந்த வளர்ச்சி பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் துணை முதல்வர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026