தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் சார்பில்,(13.09.2025) அன்று பழைய காயல் பகுதியில் சத்துணவு பயிற்சி நிகழ்ச்சி மற்றும் ஸ்வச்சதா பக்‌வாடா சமூகப் பங்கேற்பு செயல்பாடுகள் நடைபெற்றன.

இளங்கலை விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் மில்லெட் லட்டு மற்றும் பலதானிய சத்துமாவு தயாரிப்பு முறைகளை விளக்கிக் காட்டினர். ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவிக்கும் விதமாக, பாக்கெட் உணவுகளுக்குப் பதிலாக பாரம்பரிய உணவுகளைத் தேர்வு செய்வதன் நன்மைகள் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதனை வருமானம் ஈட்டும் சிறுதொழிலாக மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதே மாணவிகள் வழியுறுத்திய கருத்தாகும்.

பயிற்சி நிகழ்ச்சிக்குப் பிறகு, மாணவர்கள் ஸவச்சதா பக்‌வாடா சுத்தம் செய்யும் இயக்கத்தில் பங்கேற்றனர். இதில் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸ்சி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய அல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் ஜோஸ்லின் மற்றும் பேராசிரியர்கள் முனைவர் ஷோபா, முனைவர் நிரஞ்சனி ஆகியோர் மாணவிகளுக்கு வழிகாட்டினர். இந்நிகழ்வின் மூலம் “ஆரோக்கியமான உணவு – சுத்தமான வாழ்வு” என்ற செய்தி சமூகத்தில் வலியுறுத்தப்பட்டது.