பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களை வென்றதன் மூலம் அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஐக்கிய ஜனதாதளம் (JDU) கட்சி தலைவர் நிதிஷ்குமார் 10வது முறையாக பீகார் மாநில முதல்வராக பதவியேற்றார்.
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பொறுப்பேற்ற மகிழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் மணிநந்தன் ஆலோசனையிலும், மாநில தொழிலாளர் அணி தலைவர் தாமரை வெங்கடேசன் வழிகாட்டுதலிலும், மாவட்ட தலைவர் டி.எம். குழந்தைபாண்டி தலைமையிலும், கட்சியினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றி மகிழ்ச்சி பகிரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஆர். மேகாஸ், மாவட்ட செயலாளர் மாரியப்பன், விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆதிலிங்கம், வடக்கு மண்டல தலைவர் அற்புதமணி, துணைத்தலைவர் ராசுக்குட்டி, கயத்தாறு ஒன்றிய பொருளாளர் முருகேசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பீகாரில் சாதனை படைத்த நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்றதை ஒட்டி தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர்: தூத்துக்குடியில் ஐ.ஜ.த. உற்சாக வெற்றி கொண்டாட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உலக மீனவர் தினத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்ட விழா – தூத்துக்குடி துறைமுகம் உற்சாகம்!!
அடுத்த
விபத்தில் காயம் அடைந்த திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026