மின்சாரம் குறைவின்றி மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு சார்பாக தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திரவிய ரத்தின நகர், கணேஷ் நகர், என்ஜிஓ காலனி, ஸ்ரீராம் நகர், செல்சீலி காலனி ஆகிய நான்கு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை மக்கள் பயன்பாட்டிற்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, வட்டச் செயலாளர்கள் மூக்கையா, பொன்பெருமாள், வட்ட அவைத் தலைவர்கள் பெரியசாமி, சிவனனைந்த பெருமாள், செல்வம், வட்டப் பிரதிநிதிகள் கணேசன், பேச்சிராமன், சோமு, ராஜேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகர இலக்கிய அணி தலைவர் சக்திவேல், துணைத்தலைவர் நலம் ராஜேந்திரன், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, மாணவர் அணி துணை அமைப்பாளர் கார்த்திக், விவசாய அணி துணை அமைப்பாளர் முருகானந்தம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் செல்வலட்சுமி, தொண்டரணி துணை அமைப்பாளர் சங்கரநாராயணன், இளைஞரணி நிர்வாகிகள் ராஜா, ஹரிசங்கர், தகவல் தொழில்நுட்ப அணி பரத், நெசவாளர் அணி இசக்கிதுரை, பாக முகவர்கள் ஞானபிரகாசம், ராஜ்குமார், வட்ட நிர்வாகிகள் கருப்பசாமி, சாந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.