தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ். நகர் தெற்கு பகுதி கோல்டன் நகரில் உள்ள ஸ்ரீ தங்க கணபதி ஆலயத்தின் ஒன்பதாம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் துவக்கி வைத்து சாமி தாிசனம் செய்தாா்.
     
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில் தர்மகர்த்தா விஜயகுமார், செயலாளர் கண்ணன், பொருளாளர் தனசேகரன், துணை செயலாளர்கள் நாகராஜன், கணேசன், ராஜசேகர், இன்பசேகர், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட் உள்பட பக்தா்கள் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனர்.